மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்தார்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் திரளானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி அரசு, போராட்டங்களில் ஈடுபட்டிருப்போருக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தையும் அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆங்கிலேயேர்களை விட மோசமாக மத்திய அரசு மாறிவிடக் கூடாது என்று குறிப்பிட்டார். எனவேதான் ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்கைப் போல மாறி போராடி வருவதாக அவர் கூறினார்.
உரையாற்றிக் கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு கட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி