ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய விடுகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பிரித்திவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல் ஓவரை சந்தித்த பிரித்திவ் ஷா 2-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இந்த இணை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து மிக நிதானமாக ரன் குவித்தது. புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்துள்ளார்
சற்று முன்பு வரை 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!