மோசடி புகாரில் காஞ்சிபுரம் கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கதர் கிராம தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராக சின்னக்கண்ணு என்பவர் இருந்தபோது கதர் வாரியத்தில் போலி கணக்குகள் எழுதி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய கதர் வாரியம் சின்னக்கண்ணு மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சின்னக்கண்ணை விடுதலை செய்தது.
சின்னக்கண்ணு விடுதலையை எதிர்த்து மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், 48,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு