விழுப்புரம் அருகே கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். தச்சு வேலை செய்து வந்தார். இவர் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இதனிடையே கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு வேலையில்லாத சூழல் நிலவி வந்ததால் தொடர்ந்து கடன்வாங்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதையடுத்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தர இயலாததால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் கடன் கொடுத்தவர்கள் பட்டியல் யாருக்காவது தெரிந்தால் தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணையில் ஸ்ரீராம் நிறுவனத்தில் கூட மோகன் கடன் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு