கனடா நாட்டின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்தவர் டெரெக் ப்ரூ சீனியர். அவர் தனது எட்டு வயது மகனின் மார்பு பகுதியில் இருக்கும் பிறப்பு அடையாளத்தை போலவே அச்சு அசலாக தானும் அதே இடத்தில் பச்சை (டேட்டூ) குத்திக்கொண்டுள்ளார்.
“என் மகன் பிறக்கும் போதே அவனது மார்பு பகுதியில் வட்ட வடிவில் மிகப்பெரிய அடையாளம் ஒன்று இருந்தது. எட்டு வயதாகும் அவன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கூட மேல் சட்டை அணிந்த படி குளிப்பதை கவனித்தேன். அது எனக்கு பெருத்த வேதனையை கொடுத்தது. அதனால் அவனுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நானும் அவனுக்கு இருப்பது போல அதே இடத்தில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி இப்போது பச்சையும் குத்திக் கொண்டுள்ளேன்.
முதலில் சீக்கிரம் இந்த வேலை முடிந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் பச்சை குத்திக் கொள்ள சுமார் 30 மணி நேரம் ஆகிவிட்டது. வலி இருந்தாலும் எனது மகனுக்காக என்பதால் இந்த வலி சுகமான அனுபவமாக இருக்கிறது” என்கிறார் அந்த பாசக்கார தந்தை.
“அப்பா இதை செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்கிறார் டெரெக் ப்ரூ ஜுனியர். பச்சை குத்திக்கொண்டதை மகனிடம் தெரிவிக்க நீச்சல் குலத்திற்கு அவனை அழைத்து சென்று அதனை வெளிப்படுத்தியுள்ளார் டெரெக் ப்ரூ சீனியர்.
"I just wanted him to feel better about himself"
When his son started feeling self-conscious about his large birthmark, Derek Prue got a tattoo to matchhttps://t.co/K4VwqCzpPh pic.twitter.com/EgkMj1cTN1 — StarrQueen✨ (@AdaHenr23633738) December 12, 2020
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு