பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்து 8 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 39 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் தெருக்களில் நடந்து சென்றவர்களை வெறிபிடித்த நாய் ஒன்று கடிக்கத் துவங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த நாய் பழைய பேருந்து நிலையம் மற்றும் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் செல்பவர்களையும் தொடர்ந்து கடித்ததில் 39 பேர் காயமடைந்தனர்.
இதில் காயமடைந்த ஆண்கள் 29 பேரும் பெண்கள் 8 பேரும் குழந்தைகள் இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி தடுப்பூசிகளை போட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்கள் அதிகரிப்பால் தொடரும் நாய்க்கடி தொல்லையை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி