சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண், 4 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்துவிட்டு திரும்பியபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த பெண் ஓடிவிட்டார். இந்த கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது என்று தெரியவந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த ரூபாவதி என்பவர் வருமான வரித்துறை அதிகாரியின் தோழி என்று தெரியவந்தது.
இவரது வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரி தனது காரை அனுப்பி சாப்பாடு வாங்கி வரச்சொல்வது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோல ஓட்டுநர் அரவிந்த் உணவு வாங்க சென்றபோது, ரூபாவதி, தான் கார் ஓட்டுவதாக கூறி ஓட்டிய போதுதான் விபத்து நடந்தது தெரியவந்தது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதால் ரூபாவதியையும், அஜாக்கிரதையாக இருந்ததாக ஓட்டுநர் அரவிந்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு