மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிக்கும் என்று தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நாளை மீண்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை தீவிரம் படுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதோடு பல இடங்களில் கடைகளையும் அடைத்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் நரேந்திரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களில் 58 பேரை முசிறி போலீசார் கைது செய்து முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இதேபோல் தொட்டியம் வானபட்டறை மைதானத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 பேரும், தா.பேட்டை கடை வீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 36 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 2020 மீன்பிடி சட்டத்தை திரும்ப பெறவழியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு