விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாடலாசிரியர் வைரமுத்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 13 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எதிர்கட்சிகளும், சினிமா துறையினரும், விளையாடுத் துறையினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறுக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த பதிவு:
ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள். — வைரமுத்து (@Vairamuthu) December 8, 2020
“ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத
விவசாயிகளின் போராட்டத்தைக்
கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன;
அதை நீளவிடக்கூடாது.
இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும்
மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்” என்று ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
Loading More post
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ