பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் முன் இத்தகவல்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாக அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற விடுமுறைகளை கூட ரத்து செய்துவிட்டு தாள்களை எண்ணும் பணி நடப்பதாக உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். ரூபாய் தாள்களை விரைந்து எண்ண வசதியாக கூடுதல் இயந்திரங்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பணமதிப்பு நீக்கம் தொடர்பான தங்கள் அறிக்கை வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எம்பிக்கள் குழு தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி