கிறிஸ்துமஸ் பரிசாக மகளுக்கு 35அடி உயர கிரிஞ்ச் பொம்மையை தந்தை ஒருவர் தவறுதலாக ஆர்டர் செய்த சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டியுள்ளது. பல நாடுகள் தற்போதுதான் கொரோனாவில் மீண்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாட ஆர்வம் கொண்டுள்ளன. பலரும் தங்களுடைய அன்பானவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸை வரவேற்று வருகின்றனர். அப்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த ரே லிட்டல் என்ற நபர் தன்னுடைய செல்ல மகளுக்காக பொம்மை ஒன்றை ஆர்டர் செய்தார்.
இந்திய ரூபாய் மதிப்பில் அந்த பொம்மை ரூ.50ஆயிரத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் அந்த தந்தை பொம்மையின் அளவை சரியாக கவனிக்கவில்லை. ஆர்டர் செய்த பொம்மை வரும், வீட்டுக்குள் வைத்து விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு மிகப்பெரிய பார்சல் வீட்டுக்கு வந்தது. அதனை பார்த்ததும் லிட்டலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
லிட்டல் ஆர்டர் செய்தது சின்ன பொம்மை அல்ல 35 அடி உயர பொம்மை. வீட்டை விடவும் பெரிய பொம்மையை வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வெளியே வைத்து கொண்டாடினார் லிட்டல். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வைரலாக பரவ, பலரும் வந்து 35 அடி உயர பொம்மை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் சிறிய சுற்றுலாதலமாகவே மாறியது லிட்டலின் வீடு. வீட்டுக்கு வரும் கூட்டத்திடம், சமீபத்தில் உயிரிழந்த தன்னுடைய தந்தை நினைவாக தொண்டு நிறுவனத்துக்கு பணம் வசூலையும் லிட்டல் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 8000ஆயிரம் டாலருக்கு மேல் பணம் வசூலாகியுள்ளதால் லிட்டல் மகிழ்ச்சியில் உள்ளார். கிட்டத்தட்ட 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர் வீட்டுக்கு வருகை தந்ததாக லிட்டல் தெரிவித்துள்ளார். கொண்டாட்டத்துக்காக வாங்கப்பட்ட பொம்மை உண்மையிலேயே மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு வழிசெய்துவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளனர் லிட்டல் குடும்பத்தினர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை