நாகையில் பெய்துவரும் கனமழையால் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. நாகையில் கடந்த 4 தினங்களாக வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஒருபகுதியான 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காடம்பாடி திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் தார்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைநீர் தேங்குவதால் நெல் மூட்டைகளின் அடிப்பகுதி சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, நகராட்சி ஊழியர்களின் உதவியோடு மழைநீரை வடியவைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்