வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுகவினர் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் உடையார்பட்டி எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையில் தயாநிதி மாறன், சேகர் பாபு உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே சேலத்தில் ஸ்டாலின் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் அங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் ஓமலூர், அயோத்தி பட்டினம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு