பயனாளர்களின் தகவல்கள் கசிந்தது உண்மைதான் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக நவிமும்பை காவல்நிலையத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தங்களது நிறுவனத்தின் கணினிகளில் சட்டவிரோதமாக புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்திலிருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபோன்ற தகவல் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை மறுத்து வந்தது. இந்தநிலையில், தகவல் திருட்டு நடந்தது உண்மைதான் என்கிறரீதியில் ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் சட்டவிரோதமாக தகவல் திருடப்பட்டது என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காவல்துறை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!