தமிழ் திரை துறையின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் கடந்த திங்கள் அன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து மிக விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருந்தார். சந்திப்புக்கு பின்பு பேசிய மாவட்ட நிர்வாகிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் அவர்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு கூட்டம் நீடித்தது.
“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கு தான் தெரியும். உடல் நலத்திற்கு பாதிப்பு அளிக்காத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் நான் கூறினேன். நானும் அவரும் இந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது” என சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ச்சியாக பேசிபவர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்