வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘புரெவி’ புயலாக உருவெடுத்தது.
நிவர் புயலைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் எனவும், இது மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தப்புயலால், தென் தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை புயல் கரையைக் கடக்க இருப்பாதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது டிச.4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்