சென்னையில் வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் அடுத்த சி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் மருத்துவர் தீபக். இவரது வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண், கடந்த மாதம் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், அப்பெண் வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டதாக, தாம்பரம் காவல் நிலையத்தில் மருத்துவர் தீபக் புகார் அளித்தார். அதன் பேரில் இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, மருத்துவர் தீபக் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் வேலைக்கு செல்வதை தவிர்த்ததாகக் கூறியுள்ளார்.
சம்பள பாக்கியை வாங்க சென்றபோது, தீபக்கும், அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் என்பவரும் தம்மை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தீபக்கையும் ஆனந்த் அமிர்தராஜையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்