நாகலாந்தில் நாய் இறைச்சியை விற்கக் கூடாது என விதிக்கப்பட்ட அரசின் தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் நாகலாந்தில் நாய் மற்றும் நாய் இறைச்சி விற்பனை, இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை கோணிப்பைகளில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாகாலாந்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனை செய்வோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் செப்டம்பர் 14 ஆம் தேதி நாகாலாந்து அரசிற்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பை வழங்கியது. ஆனால் அரசு அதை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், நாய் இறைச்சியை விற்கக் கூடாது என விதிக்கப்பட்ட அரசின் தடையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் மற்றும் நாய் இறைச்சி விற்பனை, இறக்குமதிக்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு