ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி நாளை நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை கூறியிருந்தார். அதாவது மக்களிடையே எழுச்சி வரவேண்டும். அவ்வாறு வந்தால் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர் கொரோனா பேரிடர் ஏற்பட்டதால் பொதுநிகழ்வில் கலந்துகொள்ளாமல் ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் 8 மாதங்கள் கழித்து, நாளை ராகவேந்திரா மண்டபத்தில் அல்லது தனது வீட்டில் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் எனவும் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி