வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் சிக்கிய பெண்ணை பேரிடர் மீட்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
குடியாத்தம் அருகேயுள்ள வேப்பூரை அடுத்துள்ள செதுக்கரையின் ஆற்றங்கரையோரம் எல்லம்மாள் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் எல்லம்மாள் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளத்தில் சிக்கிய எல்லம்மாளை மீட்க வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்த் துறையினர் நேற்று மாலை வரை முயற்சி செய்தும் மீட்க முடியாததால், பேரிடர் மீட்புப்படையினர் அழைக்கப்பட்டனர்.
இரவில் மீட்புப்பணியை தொடர முடியாததால், ட்ரோன் மூலம் தொடர்ந்து எல்லம்மாள் கண்காணிக்கப்பட்டு வந்தார். இன்று காலை பேரிடர் மீட்புப்படையினர் எல்லம்மாளை மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?