செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக ஆயிரத்து 300 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்து சேதமாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், சித்தாமூர் ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களில் சம்பா சாகுபடி, வெள்ளை பொன்னி ரக நெல் பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். நிவர் புயல் பாண்டிச்சேரி அருகே அதிகாலை கரையை கடந்தபோது, கதிர் வந்த அந்த பயிர்களை புயல் சேதப்படுத்தியுள்ளது.
புயலால் இந்த பகுதிகளில் பலத்த காற்றும் பலத்த மழையும் பெய்தது. புயல் மற்றும் மழையினால் இந்த நெல்பயிர்கள் தண்டு உடைந்து தரையில் படுத்துவிட்டன. ஏக்கருக்கு 25லிருந்து 30 மூட்டை நெல் கிடைக்கக்கூடிய அந்த நெற்பயிர்கள், பால் கட்டும் நேரத்தில் தண்டு உடைந்ததால் தற்போது வைக்கோலுக்கு மட்டுமே பயன்படும். நெல் மூட்டைகள் தற்போது ஏக்கருக்கு 5 மூட்டைகூட கிடைக்காத சூழ்நிலை உள்ளது.
ஏக்கருக்கு 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவுசெய்த நெல்பயிர் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும்; காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!