நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலால் 14 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 16 நிவாரண முகாம்களில் இதுவரை 474 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வேலூரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக மேல் அரசம்பட்டு ஆறு, புலிமேடு காட்டாறு, அகரம் ஆறு, நாகநதி ஆறு உட்பட பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 102 ஏரிகளில் 15 ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளன.
பள்ளிகொண்டா பெரிய ஏரிக்கு பேயாறிலிருந்து நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அந்த ஏரியைச் சுற்றியுள்ள மக்கள் தாமதிக்காமல் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்துக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் , மாவட்டம் முழுவதும் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 4.00 மணிவரை மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 12.00 மணிக்கு திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எதிர்பார்த்த அளவு காற்று இல்லாததால் கடையை திறக்க உத்தரவிட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில்,மிக கனமழை பெய்து வரும் சூழலில் கடை திறப்பது கடினமானகவுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்