நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வட சென்னையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
யாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம், பெரம்பூர் ரெயில் நிலைய சாலைகள் முழுவதும் மழை தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அதேபோல் பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி கிடந்ததால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பாரிமுனை- மண்ணடி சாலையிலும் மழை தண்ணீர் தேங்கி கிடந்ததால் அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு அறிவித்ததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்தும், பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
திருவொற்றியூர் சாலையில் கனமழையுடன் கடல் காற்று அதிகமாக வீசியது. அபாயகரமான சூழ்நிலையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் குடும்பம், குடும்பமாக சென்று அலைகளின் சீற்றத்தை வேடிக்கை பார்த்தனர். அத்துடன் செல்போன் மூலம் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
ராயபுரம், சூரியநாராயணசாலையில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தது. அதேபோல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. ஓட்டல்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை தவிர்த்து மீதம் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு கிடந்தது. கனமழையிலும் டாஸ்மாக் கடைகளிலும் மட்டும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அமோக விற்பனை நடந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காமல் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்து இரும்பு தடுப்பு வேலிகள் அனைத்தும் நிலை தடுமாறி சாலையில் விழுந்து கிடந்தன. உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது. கனமழையால் சிந்தாதிரிப்பேட்டை கூவம் சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த நடைபாதையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அப்புறப்படுத்திவிட்டு, தண்ணீரை கூவம் ஆற்றுக்கு திருப்பி விட்டனர்.
இதன் பிறகு சாலையில் தேங்கிய மழை நீர் கூவம் ஆற்றுக்குள் வடிந்தது. அதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள மழை நீர் கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. ஊருக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதால் நேப்பியர் பாலம் அருகில் முகத்துவாரம் திறந்துவிடப்பட்டதால் மழை நீர் கடலில் சென்றது.
படங்கள் Courtesy: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு