வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர். அதன்படி தற்போது கடலூர் மற்றும் கல்பாக்கத்துக்கு இடையே புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி கரையிலிருந்து நிவர் புயல் சுமார் 85 கிலோ மீட்டர் தூரத்திலும், கடலூரில் இருந்து 80 கிமீ தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் மைய பகுதி கரையை கடக்கும் போது 120 முதல் 145 கிமீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதலே புதுச்சேரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி புதுச்சேரி நகர வீதிகள் காணப்படுகிறது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்