நிவர் புயலை அடுத்து தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில்,
''நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம், புயல் காற்றின் வேகமானது மணிக்கு 145கிமீ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதி மற்றும் உறுதியற்ற வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறூம் அத்தியாவசிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதுபோல தேவையான மளிகைப்பொருட்கள், சுத்தமான குடிநீர் இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!