சென்னையில் கனமழை தொடர்வதால் வேளச்சேரியில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பான்மையான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சென்னையின் முக்கியப்பகுதியான வேளச்சேரி, ஏரி போலவே காட்சி அளிக்கிறது,. பல குடியிருப்புகள் தண்ணீருக்குள் மிதக்கின்றன. பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியே எடுக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?