ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் திட்டம் குறித்து ஜியோ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ அறிமுகமான நாள் முதல் தற்போது வரை தனது வாடிக்யைாளர்களுக்காக பல்வேறு புதிய புதிய சலுகைகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் ஜியோ இணையதளத்தின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட ஒரு சில தவறு காரணமாக, ஜியோ ஃபைபர் பிளான் தொடர்பான சில தகவல்கள் கசிந்துள்ளது.
அதில், ஜியோ ஃபைபர் பிளான் மூலம் தலா 1 மாதத்திற்கு 100 எம்பிபிஎஸ்(Mbps) வேகத்தில் 100 ஜிபி டேட்டா என 3 மாதத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பு கட்டணமாக 4500 ரூபாய் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அஹமதாபாத், டெல்லி, ஹைதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, சூரத், வதோதரா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தகவல்களும் கசிந்துள்ளன. இந்த திட்டம் தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!