காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 134 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 231 ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளது. 262 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 241 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 40 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 1 ஏரி நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
இதில் ஏரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூா், நத்தப்பேட்டை, எறையூா் தேவனேரி, தாத்தனூா், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்பட மாவட்டம் முழுவதும் 134 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான தாமல் ஏரி 18 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதில் 4 அடி ஆழம் நீர் நிரம்பி உள்ளது. அதேபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட தென்னேரி ஏரியில் 15 அடி நீர் நிரம்பி உள்ளது. 20 அடி கொள்ளளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரி அதில் ஆறு அடி நீர் நிரம்பி உள்ளது ஸ்ரீபெரும்புதூர் ஏரி 18 அடி ஆழம் கொண்டதில் 15.60 அடி நீர் நிரம்பி உள்ளது மணிமங்கலம் ஏரியில் 18.60 அடையாளம் கொண்டதில் 15.60 அடி நீர் நிரம்பி உள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 23.30 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 16.11 அடி நீர் நிரம்பி உள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரியானது 13 அடி நீர் நிரம்பி உள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரி 15.30 ஆழம் கொண்டதில் 11.60 அடி நீர் நிரம்பி உள்ளது. கொளவாய் ஏரியானது 16 அடி ஆழம் கொண்டதில் 12.90 அடி நிரம்பியுள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!