நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் தேனி அருகே காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தேனி அருகேயுள்ள கூழையனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நல்லசாமி குளம், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவரால் கிராம பயன்பாட்டிற்காக வழங்கபட்ட நிலத்தில் இந்த குளம் அமைந்துள்ளது. மழை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழைநீரை இந்த குளத்தில் தேக்கி வைப்பதால் கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்த குளம் தனக்கு சொந்தம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து தடுப்பணைகளை உடைத்து குளத்தில் உள்ள மண்ணை அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரனமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தங்களின் கிராமத்திற்கு சொந்தமான குளம் காணாமல் போய் விட்டதாகவும், அதனை கண்டுபிடித்துத் தருமாறும் வீர்பாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துனர். இந்த புகாரை பெற்ற காவல்துறையினர் அதிர்த்து போய் அந்த புகாரை அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்