நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளைத் திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தங்குமிட வசதி அளிப்பது நீண்டகால பிரச்னையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது" என்றார்.
புதுடெல்லி டாக்டர் பி.டி. மார்க்கில் இந்த அடுக்குமாடி வீடுகள் அமைந்துள்ளன. 80 ஆண்டுகளும் மேல் பழமையான எட்டு பங்களாக்கள் இருந்த இடத்தில் 76 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்த இந்த நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர், "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடிவீடுகளில் பசுமை கட்டிட வளாகத்துக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய அடுக்குமாடி வீடுகள், குடியிருப்புவாசிகள் மற்றும் எம்.பி.க்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமும் தருவதாக இருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தங்குமிட வசதி அளிப்பது நீண்டகால பிரச்னையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்னைகளைத் தவிர்ப்பதால் அவைமுடிவுக்கு வந்துவிடாது, தீர்வு காண்பதால்தான் முடிவுக்கு வரும். பல ஆண்டுகளாக டெல்லியில் பூர்த்தி செய்யப்படாத இதுபோன்ற பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி, உரிய கால அவகாசத்திற்குள் முடித்துள்ளது. அம்பேத்கர் தேசிய நினைவிடம் கட்டுவது குறித்து அட்டல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஆலோசனைகள் தொடங்கிய நிலையில், 23 ஆண்டுகள் கழித்து இந்த அரசால் அது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்திற்கான கட்டடம், இந்தியா கேட் அருகே போர் நினைவுச் சின்னம், தேசிய காவல் துறை நினைவிடம் ஆகியவை நீண்டகாலம் நிலுவையில் இருந்த நிலையில், இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டன. நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், இப்போது புதிய வசதி கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கபூர்வமாக, விதிமுறைகளின்படி நடைபெறுவதில் மக்களவைத் தலைவர் துடிப்புடன் செயல்பட்டார். பெருந்தொற்று பரவிய காலத்திலும், புதிய விதிமுறைகள் மற்றும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மழைக்கால கூட்டத் தொடர் நல்லபடியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், வார இறுதி நாட்களிலும் இரு அவைகளும் செயல்பட்டன.
இளைஞர்களுக்கு 16 முதல் 18 வரையிலான வயது முக்கிய காலக்கட்டமாக இருக்கிறது. நாம் 16-வது மக்களவை பதவிக் காலத்தை 2019-ல் நிறைவு செய்தோம். இந்தக் காலகட்டம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவமானதாக உள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2019-ல் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் இந்த மக்களவையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்று முக்கியத்துவமானவையாக இருக்கின்றன. நாட்டை புதிய தசாப்த காலத்திற்கு அழைத்துச் செல்வதில் அடுத்த (18-வது) மக்களவையும் மிக முக்கியமான பங்களிப்பை செய்யும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!