லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எதிரொலியால் பெரம்பலூர் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
லக்ஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியை சந்தித்தை அடுத்து அந்த வங்கியில் எத்தணை கணக்குகள் வைத்திருந்தாலும் டிசம்பர் 16 வரை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, 5 லட்ச ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால் அதனை கழித்த பிறகே பணம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளின் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் இன்று பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியாத சூழல் நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரத் தேவைக்காக பிற வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பமுடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே லட்சுமி விலாஸ் வங்கியின் ATM செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு சாப்ட்வேர் அப்டேட் செய்வதால் இன்று பண பரிவர்த்தனை கிடையாது என கூறியதாகத் தெரிகிறது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?