கொரோனா பரவல் காரணமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ந் தேதி சிட்னியில் நடக்கிறது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கு பிறகு இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அடிலெய்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
இதனால் மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா மற்றும் வடக்கு மாகாணங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவுடனான தங்களது எல்லையை மூடி இருக்கின்றன. அடிலெய்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளுக்கு வருபவர்களை 14 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தும்படி நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த ஷெப்பீல்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விட்டு கடந்த 9-ஆம் தேதிக்கு பிறகு திரும்பியவர்களை தனிமைப்படுத்தும்படி தாஸ்மானியா சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி தாஸ்மானியா அணியில் அங்கம் வகிக்கும் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், மேத்யூ வேட் உள்ளிட்ட வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அடிலெய்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும் நிலைமையை பொறுத்து இருந்து கவனித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. டெஸ்ட் போட்டிக்கு ஸ்டேடியம் இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!