சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியைத் தாண்டியுள்ளது.
மழை காரணமாகவும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த நீர் மட்டம் 24 அடி என்றபோதிலும், தண்ணீரின் அளவு 21 அடியைத் தொட்டவுடன் பாதுகாப்பு கருதி ஏரி திறக்கப்படுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா மற்றும் இதரவிஷயங்கள் குறித்து கேட்க பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டோம்.
அவர் கூறியதாவது “ செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3.6 டி.எம்.சி. தற்போது ஏரியில் 2.6 டிஎம்சி அளவு தண்ணீர் உள்ளது. அடி அளவாக சொல்லவேண்டுமென்றால் சரியாக 20.16 அடி தண்ணீர் உள்ளது. தண்ணீர் திறப்பு பற்றிய தகவல்களை, ஏரியில் நிரம்பும் தண்ணீரைப் பொறுத்துதான் சொல்ல முடியும். அது குறித்தான முடிவுகளை உயர் அதிகாரிகளே எடுப்பர்.
செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்ட போது “டேங்க் அனைத்துமே காலியாகத்தான் உள்ளது. அதேநேரம் அந்தளவுக்கு நமக்கு மழையும் இல்லை. அப்படியே மழை அளவு அதிகமானாலும் நீர்வரத்தை பொறுத்துதான், வருகின்ற நீரை மட்டுமே செலவு செய்வோம். ஆகையால் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்றார்.
கல்யாணி பாண்டியன்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்