டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வரும் நிலையில், காற்றின் தரம் 'மோசம்' என்ற அபாய நிலையை எட்டியுள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசும் டெல்லி அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பட்டாசுகள் விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று, காற்றின் தரம் 'மோசம்' என்ற அபாய நிலையை எட்டியது. டெல்லியில் நேற்றிரவு 11 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு அதிகபட்சமாக ஆனந்த் விஹார் பகுதியில் 481 அளவுக்கு பதிவாகியிருந்தது. ஐ.டி.ஓ. பகுதியில் 454, இந்திரா காந்தி விமான நிலையம் பகுதியில் 444 என்றும் காற்றின் தரக்குறியீட்டின் அளவு பதிவானதாக, டெல்லி மாசு கட்டுப்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, தீபாவளி தினமான நேற்று, தடையை மீறி பட்டாசுகளை விற்றதாகவும், வெடித்ததாகவும் 76 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 3407 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!