பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 9 ஆடுகள் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த மேல்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா இருவரும் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர். காலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் ஆடுகள் அனைத்தும் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்துவிட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
அதேபோல் இன்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீண்டும் வீடு திரும்புவதற்காக பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை கடந்தபோது அந்த வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆடுகளின் மீது வேகமாக மோதியதில் ஒன்பது ஆடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போயின.
ம.பி.யில் வேன் திரும்பும்போது விபத்து - 10 பேர் உயிரிழப்பு
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்துள்ளனர். ஆடுகளைக் கொன்றுவிட்டு கார் நிற்காமல் சென்றிருக்கிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் ஆடுகளை ஏற்றி சாகடித்து விட்டு நிற்காமல் சென்ற காரின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி