தீபாவளி பண்டிகையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 5.5 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ராவணனுடனான போரில் வெற்றிபெற்ற ராமன் அயோத்தி திரும்பியபோது அங்கு பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அங்கு தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த வருடம் ராமர்கோயில் கட்டுவதற்கான அடிக்கல், அயோத்தியில் நடப்பட்ட நிலையில், அந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று அயோத்தி ஒட்டிய சரயூ நதிக்கரை ஓரத்தில் 5. 5 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதைத்தவிர ராமர்கோயில் கட்டப்பட உள்ள சுற்றியப் பகுதியில் மகாபாரத நாடகங்கள், விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவிற்கு தலைமை தாங்கி விளக்கை ஏற்றி வைத்தார். மேடையில் அவருடன் பல தலைவர்கள் இணைந்திருந்தனர்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!