கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-வின் (The Indian Council of Agricultural Research) கோவையைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 'தேசிய தண்ணீர் விருதுகள் 2019'-க்கான முதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மற்றும் இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில், 2020 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இணையம் மூலம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், "மண் ஈரப்பதக் காட்டி மற்றும் நீர்ப்பாசன நீர் மேலாண்மையில் அதன் செயல்பாடு" என்னும் தலைப்பிலான பணிக்காக டாக்டர் கே ஹரி, டாக்டர் டி புத்திர பிரதாப், டாக்டர் பி முரளி, டாக்டர் ஏ ரமேஷ் சுந்தர் மற்றும் டாக்டர் பி சிங்காரவேலு ஆகியோர் இந்த பரிசை பெற்றுள்ளனர். மேலும் ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பரிசையும், பட்டயம் ஒன்றையும் தங்களது பணிக்காக ICAR-கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூரை சேர்ந்த விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.
இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறையால் 'சிறந்த ஆராய்ச்சி/ புதுமை/ நீர் சேமிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்' என்னும் பிரிவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண் ஈரப்பதக் காட்டி (Soil Moisture Indicator - SMI) என்ற உபகரணம் பயனர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்ப்பாசனத்தை திட்டமிடும்போது ஈரப்பதத்தை மதிப்பிடுவதில் விவசாயிகளுக்கு இது உதவியாக இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இதன்விலை ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் வாங்கிப் பயன்பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி