சூலூரில் குலுக்கல் முறை ஏலச் சீட்டு நடத்தி 32 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு திமுக பிரமுகர் தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் திமுக முன்னாள் பேரூராட்சி கவுன்சிலராக இருந்தவர் ஜெயா. இவர் தற்போது திமுகவின் சூலூர் நகர மகளிர் அணி பொறுப்பாளராக உள்ளார். இவர் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தி வந்ததாக தெரிகிறது. அவரிடம் சூலூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம் ஒருமுறை எடுக்கக்கூடிய குலுக்கல் முறை ஏலசீட்டு போட்டு வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் வசூலித்து விட்டு சீட்டு போட்ட 7 நபர்களுக்கு குலுக்கல் சீட்டு முறையில் பணத்தை கொடுத்துள்ளார் ஜெயா. ஆனால் மீதம் உள்ளவர்களுக்கு 32 லட்சம் ரூபாயை தராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
‘சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ - விக்டோரியா மருத்துமனை
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!