கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஜீனா (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அல்மோரா மாவட்டம் சால்ட் தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர குமார் ஜீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து போராடினார்கள். அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இத்தகவலை கட்சியின் மாநில துணைத் தலைவர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு மாநில பாஜக தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர்.
ஜீனா மனைவி சமீபத்தில்தான் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து இருந்தார். அவர் இறந்த சில தினங்களிலேயே எம்.எல்.ஏ ஜீனா கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏவின் மறைவை அடுத்து மாநிலம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தை ஆளும் பாஜக கட்சி கைவிட்டுள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக அரசியல் பிரமுகர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கூட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்த் உள்ளிட்டோர் கொரோனா காரணமாக மரணமடைந்தனர்.
Loading More post
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!