நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி.
ஐபிஎல் போட்டிகள் என்றால் இரண்டு அணிகள் தான் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. ஒன்று மும்பை இண்டியன்ஸ். மற்றொன்று சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், மும்பை இண்டியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஐந்தாவது முறை கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே எதிரணிகளை வெளுத்து வாங்கி முன்னிலையில் இருந்தது மும்பை இண்டியன்ஸ் அணி. அதேபோல், பிளே ஆஃப் சுற்றிலும் அசால்டாக டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியிலும் டெல்லி அணியை ஊதி தள்ளி எளிதாக ஐபிஎல் கோப்பையை தக்க வைத்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னையை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு சீசன்களில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது மும்பை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 சீசனில் இந்த சாதனையை படைத்துள்ளது.
Champions #MI
Fifth Tym ..... Back To Back Ipl Trophy ..... Looking For Hat-trick Next Year @mipaltan #Champions #IPL2020 #IPL2020final pic.twitter.com/YOeWkDNrEh— Sankar Bhas (@sankar_bhas) November 10, 2020Advertisement
மும்பை 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கோப்பையை வென்றுள்ளது.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு