இடைத்தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் பாஜகவே முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற மற்ற மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 8 தொகுதிகளிலுமே பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல கர்நாடாகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டிலும் தற்போது வரை பாஜகவே முன்னிலை வகிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறார்.
இதேபோல ஜார்க்கண்ட்டில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கும் பாஜகவின் கையே ஓங்கி இருக்கிறது.
மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் ஒரு தொகுதியில் வெற்றி கண்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். தெலங்கானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலும் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகிக்கிறது.
இதனிடையே சத்தீஸ்கர், ஹரியானாவில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட்டில் இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
Loading More post
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!