ஐபிஎல்லில் 6-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ளது மும்பை இண்டியன்ஸ். அந்த அணி சந்தித்த முந்தைய ஃபைனல்களை திரும்பிப் பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு போட்டியைக் கூட வெல்லாத அணி என்ற விமர்சனத்துடன் நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்கியது மும்பை இண்டியன்ஸ். சீசனின் முதல் போட்டியிலுமே அந்த அணி தோல்வியையே சந்தித்தது. அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்துக் கொண்ட மும்பை இண்டியன்ஸ் அடுக்கடுக்காக வெற்றிகளைக் குவித்தது. வெளிப்படுத்திய ஆட்டங்களின் அங்கீகாரமாக, கோப்பையை வெல்லப் போகும் அணியாக கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டது. கணிப்புகளை கிட்டத்தட்ட சாத்தியமாக்கிவிட்டது மும்பை படை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை, சமரசமில்லாத அதிரடிகளின் மூலம் ஆறாவது முறையாக கோப்பையை நெருங்கியுள்ளது.
இதுவரை 8 முறை பிளே ஆஃப்க்குள் நுழைந்துள்ள மும்பை அணி, 2010-ஆம் ஆண்டு சீசனில் தான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த ஆண்டு சில சொதப்பலான ஆட்டங்களால் சென்னை அணியிடம் கோப்பையைக் கோட்டை விட்டது. அதன் பின்னர் 2013 ஆண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை படையையே இறுதிப் போட்டியில் சந்தித்தது. அப்போட்டியில் லசித் மலிங்கா, ஜான்சன் மற்றும் பொல்லார்டின் மிரட்டலான ஆட்டங்களால் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது.
2015-ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ். அப்போதைய இறுதிப்போட்டி எதிராளியும் சென்னை அணி தான். அப்போட்டியில் சிம்மன்ஸ், பொல்லார்டு, ரோகித் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்டங்களால் 202 ரன்களைக் குவித்த மும்பை, சிஎஸ்கே-வை 41 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 2016 ஆம் ஆண்டு பிளே ஆஃப் வரை கூட முன்னேறாத மும்பை, 2017 ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது. புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது.
2018 ஆம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறிய மும்பை, 2019 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆஸ்தான எதிரணியான சென்னையை எதிர்த்து களம் கண்டது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு பரபரப்பை பற்ற வைத்த அப்போட்டியில் மீண்டும் ஒரே ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது.
6 ஆவது முறையாக மீண்டும் தற்போது இறுதிக்குள் நுழைந்துள்ளது மும்பை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களில் ஃபைனலுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே அடுத்தடுத்த சீசன்களில் கோப்பையை வசப்படுத்திய அணியாக வலம் வருகிறது. அந்தப் பெருமையை இம்முறை கோப்பையைக் கைப்பற்றி மும்பை அணியும் பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?