ஐபிஎல்லின் தொடக்கத்தில் யாரும் எங்களை பற்றி பேசவில்லை. ஆனால் இப்போது கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கிறோம் என்று ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER TWO போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி குறித்து பேசிய டேவிட் வார்னர் "நாங்கள் எல்லாம் ஓர் அணியில் இருக்கிறோம். நாங்கள் வெற்றிப் பெறுவதற்காக இருக்கிறோம். நாங்கள் முதலில் சிறிய அடியை எடுத்து வைத்தோம், ஆனால் இப்போது கோப்பையை குறி வைத்து இருக்கிறோம். அணியில் இருக்கும் வீரர்கள் அவரவர் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடக்கத்தில் யாரும் பெரிதாக எங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இப்போது இருக்கிறோம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஆனால் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. எங்கள் அணியில் பயிற்சியாளர் முதல் வீரர்கள் அனைவரும் அமைதியான மனநிலையிலேயே இருக்கிறோம். கேப்டனாகிய எனக்கும் எந்தவித அழுத்தமும் இல்லை. ஆனால் ஐபிஎல் கோப்பையை வெல்ல தீவிரமாகவே இருக்கிறோம். அதற்காக எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்துவோம்" என்றார் டேவிட் வார்னர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!