பீகாரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வடக்கு பீகாரில் இருந்து சம்பரான் மாவட்டம் அமைந்திருக்கும் மேற்கு பகுதி வரையிலான 15 மாவட்டங்களில் உள்ள 78 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்து இரு கட்ட தேர்தலை போன்று, மூன்றாவது கட்டத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
அதே நேரம் சில தொகுதிகளில் லோக்ஜனசக்தி, அசாது தீன் ஒவாசியின் அகில இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி, மற்றும் பப்பு யாதவ் கட்சியும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார், சபாநாயகர் மற்றும் 12 அமைச்சர்கள் உள்பட 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் 35 வேட்பாளர்களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 37 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மெகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 46 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 25 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத் தேர்தல் முடிவடைந்ததும், வரும் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை