கடவுளை வழிபட திருத்தணி செல்கிறேன்: எல்.முருகன்

கடவுளை வழிபட திருத்தணி செல்கிறேன்: எல்.முருகன்
கடவுளை வழிபட திருத்தணி செல்கிறேன்: எல்.முருகன்

கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை; அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கி திருச்செந்தூர் வரை செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் என தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க திருத்தணியின் அனைத்து எல்லைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com