ஹைதராபாத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை 3 பேர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
கொல்லூரில் தெல்லாபூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.சி புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கணவனை பிரிந்த 30 வயதான ஒரு பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்திருக்கிறார்.
வியாழக்கிழமை அந்தப் பெண் இறந்துகிடப்பதை கவனித்த கிராமத்தினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். சோதனை முடிவில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
போலீஸ் விசாரணையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர், அவர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கையில் அவரைக் கடத்தி, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்குக் கொண்டுசென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள அந்த மூன்று பேரையும் போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?