சென்னையில் இயங்கி வரும் சிறப்பு புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் கையாளுபவர்கள், சேவை துறையை சேர்ந்தவர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரக்குகள் மற்றும் பயணிகளை அனுப்பிவைக்கும் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் நல அமைப்பு, முதியோர் இல்லங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த சேவை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்கள் சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சேவையை பெற தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து புகைப்படம் ஒட்டிய கடிதத்தை பெற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?