செஞ்சி அருகே 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். சாரயம் காய்ச்சிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் நல்லான்பிள்ளை பெற்றாள் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், செஞ்சியை அடுத்துள்ள போத்துவாய் மலைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு இருந்த 30 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் மலைப்பகுதியில் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக சேட்டு மீது நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!