ஓசூர் அருகே ஆழிக்குழியில் விழுந்த குட்டியானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றி வருகின்றன. இந்தக் காட்டுயானைகளில் அதிக அளவில் குட்டிகளும் உள்ளன. நேற்று இரவு இந்தக் காட்டு யானைகள் கூட்டம் சென்னமாளம் என்ற இடத்தில் உள்ள யானைகள் தாண்டா அகழி ஓரத்தில் உணவைத் தேடி இடம்பெயர்ந்து வந்துள்ளது.
அப்போது திடீரென கூட்டத்திலிருந்த ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று அகழி குழிக்குள் தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து காலையில் அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் உடலைமீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் குட்டியானையின் உடலை அடக்கம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். காட்டுயானை இறப்பு குறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?