‘டி20 போட்டிகளில் ரஹானே பெரிய ஷாட்களை ஆடமாட்டார் என சொல்வது உண்டு. அவர் ஒரு சாலிட் பேட்ஸ்மேன்’ என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்.
நேற்று அபுதாபியில் நடைபெற்ற டெல்லி கேபிடல்லஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது டெல்லி அணி.
அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் பேட்ஸ்மேன் ரஹானே. 46 பந்துகளில் 60 ரன்களை எடுத்திருந்தார் அவர்.
இந்நிலையில், ரஹானேவை சாலிட் பேட்ஸ்மேன் என புகழ்ந்துள்ளார் சேவாக்.
“அவரை சில டி20 வீரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பவுண்டரிகளை அவர் அடிக்க தவறுவதே அதற்கான காரணமாக சுட்டிக்காட்டுவது உண்டு. ஆனால் ரஹானே ஒரு சாலிட் பேட்ஸ்மேன். களத்தில் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர். அவர் ஆடும் போது எதிர் திசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடும் டாஸ்க்கை செய்யலாம்.
ரஹானேவும், பிருத்வி ஷாவும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கின்ற போது கடினமான முடிவினை எடுத்தார் டெல்லியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங்.
இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார். அதை சரியாக பயன்படுத்தி ரஹானே மேட்ச் வின்னிங் இன்னிங்க்ஸை கொடுத்துவிட்டார்.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி நேற்று வென்று காட்டியது” என சேவாக் தெரிவித்துள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி